பாபர் மசூதி: லோக்சபாவில் பெரும் அமளி
டெல்லி:மக்களவையில் இன்று பாபர் மசூதி விவகாரம் தொடர்பாக நடந்த சூடான விவாதத்தால் அமளி நிலவியது.இதையடுத்து பிற்பகல் 12 மணி வரைக்கும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
இன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 14வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று காலை மக்களவைகூடியதும்,பாஜக மற்றும் சிவசேனை உறுப்பினர்கள் எழுந்து, ஜெய் ஸ்ரீராம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும்,அப்சலை தூக்கிலிடு என கோஷமிட்டனர்.
இதற்கு காங்கிரஸ், சமாஜவாடி, இடது சாரிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்புக்கும்இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இதனால் சபையை நடத்த முடியாத சூழ்நிலை உருவானது.
இதைத் தொடர்ந்து பிற்பகல் 12 மணி வரை சபையை ஒத்திவைத்து வெளியேறினார் சபாநாயகர் சோம்நாத்சாட்டர்ஜி.
சபாநாயகர் கூட்டத்தைப் புறக்கணிக்க தேஜகூ. முடிவு:
இதற்கிடையே, சபையை நடத்துவதில் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி பாரபட்சமான அணுகுமுறையைக்கடைப்பிடிப்பதாக குற்றம் சாட்டியுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி, சபாநாயகர் கூட்டும் கூட்டங்களையும்,அலுவல்ஆய்வுக் குழுக் கூட்டங்களையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.
மக்களவை ஒத்திவைக்கப்பட்டவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடந்தது.இக்கூட்டம் குறித்து பாஜக எம்.பி. வி.கே.மல்ஹோத்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், மக்களவையைசபாநாயகர் நடத்தும் விதம் சரியில்லை. பாரபட்சமாக இருக்கிறது. எனவே இந்தப் பிரச்சினை தீரும் வரைசபாநாயகர் கூட்டும் கூட்டங்களையும், அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டங்களையும் புறக்கணிக்கதீர்மானித்துள்ளோம்.
எதிர்க்கட்சிகளிடம் சபாநாயகர் பாரபட்சமாக நடந்து கொள்கிறார். இரட்டை நிலையை அவர் கடைப்பிடிக்கிறார்.
மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து சபையில் பிரச்சினை எழுப் முயன்றால் அதை அனுமதிக்க மறுக்கிறார்சபாநாயகர்என்றார் மல்ஹோத்ரா.












Click it and Unblock the Notifications