பெங்களூரு-தமிழகம் இடையே சிறப்பு ரயில்கள்
பெங்களூரூ:கிறிஸ்துமஸ், பொங்கல் தினத்தையொட்டி பெஙகளூரூரில் இருந்து நாகர்கோவில், சென்னைக்கு சிறப்பு ரயில்விடப்படும் என தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கிறஸ்துமஸ், சபரிமலை மண்டல பூஜை, பொங்கல் பண்டிகை மற்றும் குளிர் காலங்களில் ஏற்படும் பயணிகளின்கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பெங்களூரூரில் இருந்து நாகர்கோவில், சென்னை, எர்ணாகுளம் ஆகியஇடங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென் மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதன் விவரம்:
பெங்களூர்-நாகர்கோவில் சிறப்பு ரயில் ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் பெங்களூரூரில் இருந்துமாலை 5.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.30 மணிக்கு மதுரை சென்றடையும், பின்னர் அங்கிருந்துகாலை 6.35 மணிக்கு புறப்பட்டு காலை 10.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
நாககோவிலில் இருந்து சிறப்பு ரயில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள்காலை 9 மணிக்கு பெங்களூரூரை வந்தடையும்.
இதேபோல் பெங்களூரூ-சென்னை வாராந்திர சிறப்பு ரயில் பெங்களூரூரில் இருந்து வெள்ளிக்கிழமை தோறும்இரவு 11 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.15 மணிக்கு சென்னை சென்றடையும்.
சென்னையில் இருந்து சிறப்பு ரயில் சனிக்கிழமை தோறும் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.55மணிக்கு பெங்களூரை வந்தடையும்.












Click it and Unblock the Notifications