For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முல்லை-அடுத்த வாரம் அமைச்சர்கள் பேச்சு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக, கேரள அமைச்சர்கள்மட்டத்திலான பேச்சுவார்த்தை அடுத்த வாரம் டெல்லியில் நடைபெறுகிறது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக, கேரளமுதல்வர்களிடையே டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும்ஏற்படவில்லை. இதையடுத்து இரு மாநில அமைச்சர்கள் மட்டத்திலானபேச்சுவார்த்தையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனும், கேரள நீர்ப்பாசனத் துறைஅமைச்சர் பிரேமச்சந்திரனும் சந்தித்துப் பேச முடிவு செய்யப்பட்டது. இந்தப்பேச்சுவார்த்தையும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் ஜோஸ் முன்னிலையில்நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் நேற்று சைபுதீன் ஜோஸை சந்தித்துப்பேசினார். சந்திப்புக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மரியாதைநிமித்தமாகத்தான் ஜோஸை சந்தித்துப் பேசினேன். இரு மாநில அமைச்சர்கள்மட்டத்திலான பேச்சுவார்த்தையை எப்போது மேற்கொள்ளலாம் என அவர் என்னிடம்கேட்டார்.

அதற்கு நான் தமிழக சட்டசபைக் கூட்டம் முடிந்து விட்டது. எனவே எப்போதுவேண்டுமானாலும் பேச்சுவார்த்தையை வைத்துக் கொள்ளலாம் என தெரிவித்தேன்.இதையடுத்து கேரள மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சரிடம் பேசி விட்டு அடுத்தவாரமே அல்லது அடுத்த 10 நாட்களிலோ பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாகஜோஸ் என்னிடம் தெரிவித்தார்.

டெல்லியில் ஜோஸ் முன்னிலையில் நடந்த இரு மாநில முதல்வர்கள் கூட்டத்தில்கேரள முதல்வர் அச்சுதானந்தன் பேசிய பேச்சின் தமிழாக்கத்தை தமிழ் நாளிதழ்களில்கேரள அரசு வெளியிட்டுள்ளது. இதை நாங்கள் ஏற்க முடியாது. இது முற்றிலும்தவறான ஒன்று. இந்த விளம்பரம் குறித்தும் அமைச்சர் ஜோஸிடம் நான் எடுத்துக்கூறினேன் என்றார் துரைமுருகன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X