7 அடி உயர பிரமாண்ட திருக்குரான்
சென்னை:7 அடி உயரம் உடைய பிரமாண்ட புனித திருக்குரான் வெளியிடப்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜா ஷெரீப் இந்த பிரமாண்ட திருக்குரானைஉருவாக்கியுள்ளார். இந்த திருக்குரான் புத்தகம் 7 அடி உயரம் உள்ளது. மொத்தம் 250கிலோ எடை கொண்டதாகவும், 610 பக்கங்கள் கொண்டதாகவும் அமைந்துள்ளது.
இந்த நூல் முழுவதும் கையால் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இன்றுஇந்த பிரமாண்ட குரான் நூலை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியம்முன்னிலையில் ஆற்காடு இளவரசர் முகம்மது அலி வெளியிட்டார்.
இதற்கு முன் திருக்குறளில் உள்ள 1,330 குறள்களையும் பனை ஓலையில் எழுதிவெளியிட்டு சாதனை படைத்தவர் ராஜா ஷெரீப் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2003ம் ஆண்டு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கோவைக்கு வந்தபோதுஇந்த பனை ஓலை குறள் நூலை அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார் ஷெரீப்.
தற்போது அரபி மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த பிரமாண்ட குரானையும் அவர்அரபு நாடு ஏதாவது ஒன்றுக்கு அன்பளிப்பாக வழங்கத் திட்டமிட்டுள்ளராம்.












Click it and Unblock the Notifications