ராணுவத் தாக்குதலில் 20 தமிழர்கள் பலி
கொழும்பு:இலங்கையின் வாகரை பகுதியில், ராணுவம் நடத்திய கடும் தாக்குதலில் 20 அப்பாவித் தமிழர்கள்கொல்லப்பட்டனர். விடுதலைப் புலிகள் நடத்திய பதில் தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகதகவல்கள் வெளியாகியுள்ளன.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இலங்கை அரசு கடுமையாக அமல்படுத்த முடிவு செய்துள்ள நிலையில், வடகிழக்கில் மோதல் உக்கிரமடைந்துள்ளது. வாகரை பகுதியில் இலங்கை ராணுவம் கடும் பீரங்கித் தாக்குதலில்ஈடுபட்டது.
தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் விமானப் படை மூலம் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது. பால்சேனை,வம்மிவெடுவான் ஆகிய பகுதிகளில் தமிழர்கள் அடைக்கலம் புகுந்திருந்த முகாம்கள் மீது ராணுவம் நடத்தியகடும் தாக்குதலில் 20 அப்பாவித் தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். 41 பேர் படுகாயமடைந்தனர்.
கொல்லப்பட்டவர்களில் 6 மாதக் கைக்குழந்தையும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. காயமடைந்தவர்கள்வாகரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் பட்டவர்களை மட்டக்களப்புக்கு கொண்டு செல்ல ராணுவம் அனுமதிக்காமல்தடுத்து விட்டது. இதனால் படுகாயமடைந்த 15 பேர் கதிரவேலியில் உள்ள திலீபன் மருத்துவ மையத்திற்குஅழைத்துச் செல்லப்பட்டனர்.
ராணுவத் தாக்குதலுக்குப் பதிலடியாக விடுதலைப் புலிகள் நடத்திய பதில் தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள்கொல்லப்பட்டதாக புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications