காதலர்களை அடித்து விரட்டிய விஎச்பி!!
அகமாதாபாத்:அகமதாபாத்தில் பூங்காவில் பேசிக் கொண்டிருந்த காதல் ஜோடிகளை விசுவ இந்து பிரிஷச் அமைப்பைச் சேர்ந்தபெண் தொண்டர்கள் பிரம்பால் அடித்து விரட்டியடித்தனர்.
பூங்காவில் இளம் காதல் ஜோடிகள் அமர்ந்து பேசி கொண்டிருந்த நிலையில் விசுவ இந்து பரிஷத் அமைப்பினர்சிலர் கையில் பிரம்புகளுடன் பூங்காவிற்குள் நுழைந்தனர். அப்போது அவர்கள் கண்ணில் பட்ட காதல்ஜோடிகளை பிரம்பால் அடித்து விரட்டினர்.
இதுகுறித்து பெண் தொண்டர் ஒருவர் கூறுகையில், பெண்களை போகப் பொருளாக பயன்படுத்திக் கொள்ளநினைக்கும் ஆண்களை இந்த சமூகத்தில் இருந்து விரட்டியடிக்க விரும்புகிறோம், அதற்காகவே இந்தநடவடிக்கை என்றார்.
இந்தச் சம்பவத்தில் பிரம்படி வாங்கிய ஒரு பெண் கூறுகையில், எனது காதலரை அடித்தனர், நான் தடுக்கச்சென்றேன். என்னையும் அடித்தனர், இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லாயில்லை என்றார் அழுதபடியே.
உத்தரப் பிரதேசத்தில் இளம் ஜோடிகளை போலீசார் அடித்து, உதைத்து விரட்டிய சம்பவம் சில மாதங்களுக்குமுன் நடந்து தேசிய அளவில் பரபரப்பு ஏற்பட்டது.
இப்போது அகமதாபாத்தில் விஎச்பி புகுந்து விளையாடியுள்ளது.
இந்த சம்பவத்தின் பின்னணியில் லோக்கல் விசுவ இந்து பரிஷத்தின் தலைவர் பாபு பஜ்ரங்ஜி இருப்பதாகக்கூறப்படுகிறது. இவர் மீது கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த மதக் கலவரம் தொடர்பாக பல வழக்குகள்இருப்பது குறிப்பிடத்தக்கது.