சிலி-முன்னாள் சர்வாதிகாரி பினோசெட் மரணம்
சான்டியாகோ (சிலி):தென் அமெரிக்க நாடான சிலியின் முன்னாள் சர்வாதிகாரி ஜெனரல் அகஸ்டோ பினோசெட் (வயது 91)மரணமடைந்தார். இதன்மூலம்" கொடூர கொலைகளுக்காக கிடைக்கவிருந்த தண்டனையில் இருந்து அவர்தப்பிவிட்டார்.
மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவர் ராணுவ மருத்துமைனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்றுகாலமானார்.
சிலியில் 1973ம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை பிடித்தவர் பினோசெட். இதற்கு அவருக்கு அமெரிக்காஉதவியது.
ஆனால் 17 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அவர் பல கொடுமைகளைச் செய்தார். அவரை எதிர்த்தநூற்றுக்கணக்கானவர்கள் படுககொலை செய்யப்பட்டனர்.
இந் நிலையில் அவர் ஆட்சியை இழந்தார். இதையடுத்து அவர் மீது 300க்கும் மேற்பட்ட மனித உரிமை மீறல்வழக்குகள் போடப்பட்டன.
வழக்குகளை சந்தித்து வந்த அவருக்கு மரண தண்டனை கிடைக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில் அவர்மரணடைந்துள்ளார்.
அவரது மரணச் செய்தி கேட்டதும் சிலி முழுவதும் அவரது எதிர்ப்பாளர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புவழங்கியும் கொண்டாடினர்.












Click it and Unblock the Notifications