For Daily Alerts
Just In
போடியில் மீண்டும் நிலச்சரிவு
தேனி:தேனி மாவட்டம் போடியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் சில வாரங்களுக்கு முன் பெய்த கன மழையால் போடி மெட்டு சாலை பகுதியில் பல்வேறுஇடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. ராட்சத பாறைகளும் ரோட்டில் உருண்டு விழந்தன. பல இடங்களில் பாதையேவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் இந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பஸ்கள், லாரிகள் கம்பம் மெட்டு வழியாக திருப்பிவிடப்பட்டு சாலை சீரமைக்கும் பணி இரவு பகலாக நடந்தது. ருவழியாக பாதை சீராக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியது.
இந் நிலையில் நேற்று போடி மெட்டு பகுதியில் லோசன மழை பெய்தது. இதனால் 2 இடங்களில் மீண்டும்நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
7வது கொண்டை ஊசி வளைவில் தடுப்பு சுவரே இடிந்து விழந்துவிட்டது. இந்த சுவர் கடந்த 2 மாதத்திற்கு முன்புதான் கட்டப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
Comments
Story first published: Saturday, December 23, 2006, 5:30 [IST]