2ம் கட்டமாக 21,682 பேருக்கு இலவச நிலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் இலவச நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக வரும்டிசம்பர் 17ம் தேதி 21,682 பேருக்கு நிலம் வழங்கப்படவுள்ளது.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஒன்றான இலவச நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 23,440ஏழை விவசாயி குடும்பங்களுக்கு பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17ம் தேதி தலா 2 ஏக்கர் நிலம்வழங்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டாம் கட்டமாக இலவச நிலம் வழங்கும் திட்டத்தை டிசம்பர் 17ம் தேதி விழுப்புரத்தில்முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். அன்றைய தினம் தமிழகம் முழுவதும் அரசுக்கு சொந்தமானஆக்கிரமிப்பில் இல்லாத 5,395 ஏக்கர் தரிசு புறம்போக்கு நிலம், பண்படுத்தப்பட்டு 5,399 நிலமற்ற விவசாயகுடும்பங்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.

மேலும் அதே தினத்தில் அரசுக்கு சொந்தமான, ஆக்கிரமிப்பில் உள்ள 10,547 ஏக்கர் தரிசு புறம்போக்கு நிலத்தைபண்படுத்தி 15,614 நிலமற்ற சிறு குறு விவசாய குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கவும் தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.

இதைத் தவிர சிறு குறு விவசாயிகளுக்குச் சொந்தமான 9,953 ஏக்கர் பட்டா தரிசு நிலங்களை அரசின் செலவில்மேம்படுத்தி விளை நிலங்களாக மாற்றி 5,736 விவசாய குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.

இதன் மூலம் மொத்தம் 21,682 பேருக்கு இலவச நிலம் தரப்படும் என அரசின் செய்திக் குறிப்பில்கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+