நாடாளுமன்ற தாக்குதல்: 5வது ஆண்டு தினம்
டெல்லி:நாடாளுமன்றத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலின் 5வது ஆண்டு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், நாடாளுமன்றத்தின் மீது காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதல்நடத்தியதில் பெண் காவலர் உள்பட 9 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். 4 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் நடந்ததன் 5வது ஆண்டு தினத்தையொட்டி தாக்குதல் சம்பவம் நடந்த இடத்தில் இன்று 9பாதுகாப்புப் படையினரின் படங்கள் வைக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, மாநிலங்களவைத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத், அமைச்சர்கள்,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர்.
பின்னர் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உயிரிழந்த 9 காவலர்களின் தியாகத்திற்கு புகழஞ்சலிசெலுத்தப்பட்டது. 2 நிமிடம் மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. மக்களவையில் இந்த வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவின் தண்டனை நிறைவேற்றப்படாமல் இருப்பது குறித்து பாஜக பிரச்சினைஎழுப்ப முயன்றது.
ஆனால் அதை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அனுமதிக்க மறுத்தார். இதனால் சில நிமிடங்கள் அவையில்சலசலப்பு நிலவியது. பின்னர் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்தன.












Click it and Unblock the Notifications