ஜப்பான் கிளம்பினார் மன்மோகன் சிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:நான்கு நாள் பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் இன்று காலை ஜப்பான் புறப்பட்டச்சென்றார். பிரமதருடன் அவரது மனைவி குர்சரன் கெளர் மற்றும் உயர் மட்டக்குழுவும்டோக்கியோ சென்றுள்ளது. ஜப்பான் செல்லும் பிரதமருக்கு அமைச்சர்கள், காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.இன்று இரவு பிரதமர் டோக்கியோ சென்றடைகிறார்.

நாளை பிரதமருக்கு ஜப்பான் மன்னர் மற்றும் ராணி ஆகியோர் பாரம்பரிய முறைப்படிவரவேற்பு அளிக்கின்றனர். அதன் பின்னர் நாளை பிற்பகல் ஜப்பான் பிரதமர்ஷின்ஷோ அபேயை மன்மோகன் சிங் சந்திக்கிறார். அதன் பிறகு இரு தலைவர்களும்கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கின்றனர். அன்று இரவு பிரதமருக்கு ஜப்பான்பிரதமர் விருந்தளித்து கெளரவிக்கிறார்.

நாளை ஜப்பான் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்திலும் பிரதமர் கலந்து கொண்டு உரைநிகழ்த்துகிறார். நாளை மாலை இந்திய விழாவையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.இந்த விழாவின்போது 2007ம் ஆண்டுக்கான இந்திய-ஜப்பான் நட்புறவுசின்னத்தையும் இரு நாட்டு பிரதமர்களும் திறந்து வைக்கிறார்கள்.

இதன் பின்னர் 15ம் தேதி இரு நாட்டு வர்த்தக சங்கத்தின் சார்பில் நடைபெறும்கூட்டத்தில் பிரதமர் உரை நிகழ்த்துகிறார். தனது ஜப்பான் பயணத்தின்போது முன்னாள்பிரதமர் யோஷிரோ மோரி, மூத்த அமைச்சர்கள், ஜப்பான்-இந்திய நாடாளுமன்றநட்புறவுக் குழுத் தலைவர் உள்ளிட்டோரை பிரதமர் சந்திக்கிறார்.

தனது ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு சனிக்கிழமை மாலை மன்மோகன் சிங்டெல்லி திரும்புகிறார். டோக்கியோ கிளம்பும் முன்னர் மன்மோகன் சிங் பேசுகையில்,இந்திய வெளியுறவுக் கொள்கையில், கிழக்கத்திய நாடுகளுக்கு நாம் அளிக்கும்முக்கியத்துவத்தை இந்தப் பயணம் உணர்த்துகிறது. கிழக்கு ஆசிய பிராந்தியத்தில்வலுவான நாடாக திகழும் ஜப்பானுடன் நெருங்கிய உறவு ஏற்பட இந்தப் பயணம்உதவும்.

இந்தியாவும் ஜப்பானும் அரசியல், பொருளாதார ரீதியில் மிகவும் நெருங்கியதொடர்புடைய நாடுகள். பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் இரு நாடுகளின்முக்கியத்துவமும் அதிகரித்து வருகிறது.

புதிய கோணத்தில் இரு நாட்டு உறவுகளும் செல்ல ஆரம்பித்துள்ளன. இந்தஉறவுகளை வலுப்படுத்த இந்த பயணத்தை பயன்படுத்திக் கொள்வேன்.சுற்றுலா, எரிசக்தி, போக்குவரத்து, அறிவியல் தொழில்நுட்பம், கலாச்சாரம் ஆகியதுறைகளில் இரு நாடுகளும் மேலும் இணைந்து செயல்பட இந்த பயணத்தின்போதுஆக்கப்பூர்வமான பேச்சுக்கள் இடம்பெறும் என்றார் மன்மோகன் சிங்.

இந்தப் பயணத்தின் போது இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம், ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம், ஜி4 நாடுகளின் ஒருங்கிணைந்தசெயல்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்தும் பேசப்படும் எனதெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+