For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வங்கி, இன்சூரன்ஸ் ஊழியர்கள் நாளை ஸ்டிரைக்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:வங்கிப் பணிகளை அவுட் சோர்சிங் மூலம் தனியாருக்கு விடுவதை எதிர்த்து வங்கிமற்றும் இன்சூரன்ஸ் ஊழியர்கள் நாளை நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம்மேற்கொள்கின்றனர்.

விலை வாசி உயர்வைக் கட்டுப்படுத்துத தவறியது, தொழிலாளர் விரோதகொள்கைகளை கடைப்பிடிப்பது, வங்கிகப் பணிகளை அவுட் சோர்சிங் செய்யஅனுமதிப்பது, வங்கிகளை தனியார்மயாக்குவது உள்ளிட்ட மத்திய அரசின்முடிவுகளைக் கண்டித்து இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதில் பொதுத் துறை வங்கிகள், பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் முழு அளவில்பங்கேற்கின்றனர். இருப்பினும் ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிஊழியர்கள் இதில் பங்கேற்கவில்லை.

சென்னையில் நாளை காலை 10 மணிக்கு பீச் ரோட்டில் உள்ள இந்தியன் வங்கிதலைமை அலுவலகம் முன்பு கூடி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்வார்கள் எனஇந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ரங்கராஜன்தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தில் அகில இந்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சம்மேளனமும்பங்கேற்கிறது. மேலும், தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு ஆசிரியர்கள் சங்கமும்இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X