இந்து மக்கள் கட்சி அர்ஜூன் ஜாமீன் தள்ளுபடி
மதுரை:ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை உடைப்பில் தொடர்புடைய இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன்சம்பத்தின் முன் ஜாமீன் மனுவை மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் எதிரே அமைக்கப்பட்டிருந்து பெரியார் சிலையை கடந்த சில தினங்களுக்குஉடைக்கப்பட்டது. இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட 8 பேர்மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து அர்ஜூன் சம்பத் முன் ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கதல் செய்தார். அதில்கூறியிருப்பதாவது,
பெரியார் சிலை உடைப்பு சம்பவத்தின் போது நான் ஸ்ரீரங்கத்தில் இல்லை. அந்த வழக்கில் கைது செய்யப்பட்டராகவன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனக்கும் சிலைஉடைப்புக்கும் தொடர்பு இல்லை. எனவே போலீசார் என்னை கைது செய்யும் பட்சத்தில் எனக்கு முன் ஜாமீன்வழக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.ஜெயபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுதரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அர்ஜூன் சம்பத்துக்கு முன் ஜாமீன் வழக்க ஆட்சேபனை தெரிவித்தார்.இதையடுத்து அவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications