ரயில் கழிவறையில் வீசப்பட்ட ஆண் சிசு!
Subscribe to Oneindia Tamil
கோவை:கோவை அருகே போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில் ஒன்றின்கழிவறையில் பிறந்து சில நாட்களே ஆன ஆண் சிசு வீசப்பட்டிருந்தது அப்பகுதியில்பரபரப்பை ஏற்படுத்தியது.
போடிநாயக்கனூர்-போத்தனூர் இடையிலான பாசஞ்சர் ரயில் போத்தனூர் ரயில்நிலையத்தில் நின்றிருந்தது. ரயில் கிளம்ப சிறிது நேரம் இருந்த நிலையில், திடீரெனகழிவறையிலிருந்து குழந்தையின் அழுகுரல் வருவதைக் கேட்ட பயணிகள் அங்குசென்று பார்த்தனர்.
அங்கு சணல் பையில் சுற்றி ஒரு ஆண் சிசு போடப்பட்டிருந்தது. இதைப் பார்த்தபயணிகள் அதிர்ச்சி அடைந்து அந்தக் குழந்தையை தூக்கினர். ரயில் நிலையஅதிகாரிகளிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் போலீஸாருக்குத் தகவல்கொடுத்து விட்டு கோவை மருத்துவக் கல்லூரியில் அந்தக் குழந்தையைஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications