கத்தார்: கழிவுநீர்க் குழாயில் சிக்கி இந்தியர் பலி
துபாய்:கத்தார் தலைநகர் தோஹாவில் கழிவு நீர்க் குழாயில் சிக்கி கேரளாவைச் சேர்ந்த வாலிபர் உள்பட 3 ஆசியர்கள்பரிதாபமாக பலியாயினர்.
கேரளாவைச் சேர்ந்தவர் அஜய்குமார். தோஹாவில் உள்ள மிகப் பெ>ய கழிவு நீர்க் குழாயை சுத்தப்படுத்தும்பணியில் அவர் உள்பட சில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது கழிவு நீர்க் குழாய்க்குள் சிக்கிக்கொண்ட அஜய் குமார், கழிவு நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக இறந்தார்.
அவரை மீட்பதற்காக நேபாள நாட்டைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் உள்ளே சென்றனர். ஆனால் அவர்களும்பரிதாபமாக அடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து மூன்று பேருடைய உடல்களையும் மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டது. இதில் அஜய்குமார் மற்றும் நேபாளத் தொழிலாளி ஒருவரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன.மாலையில் இன்னொரு தொழிலாளரின் உடல் மீட்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் 19ம் தேதியும் இதே பகுதியில் கழிவு நீர் குழாயை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 5ஆசிய தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். தற்போது 2வது சம்பவ.ம் இதே பகுதியில் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications