For Daily Alerts
Just In
தியாகிகள் பென்ஷன் ரூ. 10,001 ஆக உயர்வு
டெல்லி:சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மத்திய அரசு வழங்கும் மாதாந்திரஓய்வூதியம் ரூ. 10,001 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த ஆண்டு அக்டோபர் மாதம்முதல் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் மாதாந்திரஓய்வூதியம் ரூ. 2330 அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஓய்வூதியம் மற்றும் விருப்பப் படியை சேர்த்து மாதந்தோறும் ஓய்வூதியம் ரூ. 10,001 ஆகஇருக்கும்.
மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளது என்றுதெ>விக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Thursday, December 28, 2006, 5:30 [IST]