சொத்துக் குவிப்பு வழக்கு: லாலு, ராப்ரி விடுதலை
பாட்னா:சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவியும், பீகார்மாநில முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி ஆகியோரை பாட்னா நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.
கடந்த 1990ம் ஆண்டு முதல் 1997 வரை லாலு பிரசாத் பீகார் முதல்வராக இருந்தார். அப்போது வருமானத்திற்குமீறிய வகையில் 46 லட்சத்து 26 ஆயிரத்து 826 ரூபாய் மற்றும் 87 பைசா அளவுக்கு சொத்து சேர்த்ததாக கூறிலாலு மற்றும் மனைவி ராப்ரி தேவி ஆகியோர் மீது பாட்ானா சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த 1998ம் ஆண்டு வழக்குதொடரப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட லாலு பிரசாத் சில மாதம் சிறையில் இருந்தார். இதையடுத்து ராப்ரி தேவிமுதல்வரானார். பின்னர் லாலு ஜாமீனில் விடுதலை ஆனார். இந்த வழக்கு தொடர்பாக கடந்த 6 ஆண்டுகளாகவிசாரணை நடந்து வந்தது.
132 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. 2000மாவது ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.டிசம்பர் 5ம் தேதி வழக்கு விசாரணை முடிவடைந்தது.
இதையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையொட்டி லாலு, ராப்ரி ஆகியோர் ஆயிரக்கணக்கானதொண்டர்கள் புடை சூழ பாட்னா சிபிஐ நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.
நீதிபதி முனி லால் பாஸ்வான் கூறுகையில், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி ஆகியோர் மீதானபுகார்களிலிருந்து இருவரும் விடுவிக்கப்படுகிறார்கள் என்று தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
தீர்ப்பைத் தொடர்ந்து லாலுவின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி கோஷம் இட்டனர். பின்னர் வெளியே வந்த லாலுபிரசாத் தீர்ப்பு குறித்துக் கூறுகையில், பாலும், தண்ணீரும் தெளிவாகி விட்டது. இறைவனுக்கு நன்றி. கடைசியில்எங்களுக்கு நீதி கிடைத்துள்ளது என்றார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படுமா என்று சிபிஐ வழக்கறிஞர் அன்சாரியிடம் கேட்டபோது,தீர்ப்பின் நகல் கைக்கு வந்த பிறகுதான் எந்த முடிவாக இருந்தாலும் எடுக்கப்படும் என்றார்.
இந்த வழக்கிலிருந்து லாலு விடுவிக்கப்பட்டு விட்டாலும் கூட கால்நடைத் தீவண ஊழல் வழக்கு உள்ளிட்டமேலும் 6 வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications