சென்னையில் 32 அடி உயர கிறிஸ்துமஸ் மரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னை லீ ராயல் மெரீடியன் ஹோட்டலில் தென்னிந்தியாவிலேயே மிகவும் உயரமான கிறிஸ்துமஸ் மரம்வைக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் 5 நட்சத்திர ஹோட்டலான லீ ராயல் மெரீடியன் ஹோட்டல் உள்ளது. இங்கு 32 அடிஉயரத்தில் பிரமாண்டமான கிறிஸ்துமஸ் மரம் நிறுவப்பட்டுள்ளது.
நிஜமான இலைகளுடன் இந்த மரம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1800 மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுஜொலி ஜொலிக்கிறது. இந்த மரத்தை நடிகர் ஸ்ரீகாந்த் இன்று தொடங்கி வைத்தார்.
தென்னிந்தியாவிலேயே இதுதான் உயரமான மரம் என்று ஹோட்டல் நிர்வாகத்தார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications