ஆளுநரிடம் பாஜக-இ.முன்னணி-ஆர்எஸ்எஸ் புகார்
சென்னை:ஸ்ரீரங்கத்தில் கோவில் அருகே பெரியார் சிலையை வைக்கக் கூடாது என தமிழகஅரசுக்கு உத்தரவிடக் கோரி ஆளுநர் பர்னாலாவிடம் பாஜக, இந்து முன்னணி,ஆர்எஸ்எஸ் ஆகியவை கோரிக்கை விடுத்துள்ளன.
இந்து இயக்கங்களைச் சேர்ந்த பிரமுகர்கள் நேற்று கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவைச்சந்தித்து, கோவில்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் குறித்து புகார்தெரிவித்தனர்.
இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன், ஆர்எஸ்எஸ் மாநில பொதுச் செயலர்ராஜேந்திரன், பாஜக, மாநிலத் தலைவர் இல.கணேசன் மற்றும் இந்து இயக்கங்களைச்சேர்ந்தவர்கள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவை சந்தித்தனர்.
அப்போது அவரிடம் ஒரு மனு அளித்தனர். அதில்,
ஸ்ரீரங்கம் கோவில் அருகே நிறுவப்பட்டிருந்த பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதைநாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அதே நேரத்தில் பெரியார் சிலை மீதானதாக்குதலுக்கு பிறகு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கோவில்கள் மீது தாக்குதல்கள்நடந்துள்ளன.
சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்தசெயல்களை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஸ்ரீரங்கம் கோவில் அருகில் பெரியார் சிலையை வைக்காமல் வேறு இடத்தில்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications