ஊசி மூலம் எச்ஐவி-6 பேருக்கு மரண தண்டனை
திரிபோலி:நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமியருக்கு ஊசி மூலம் எச்.ஐ.வி. வைரஸை செலுத்தியகுற்றத்திற்காக பல்கேரியாவைச் சேர்ந்த நான்கு நர்சுகள் மற்றும் பாலஸ்தீனத்தைச்சேர்ந்த ஒரு டாக்டருக்கு லிபிய நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
1990ம் ஆண்டு பெங்காஸி என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்த 426 குழந்தைகளுக்கு ஊசி மூலம் எச்.ஐ.வி. வைரஸைசெலுத்தியதாக லிபியாவில் பெரும் சர்ச்சை எழுந்தது. எச்.ஐ.வி. வைரஸ்செலுத்தப்பட்ட குழந்தைகளில் 50 பேர் பரிதாபமாக இறந்து போயினர்.
இந்த சம்பவம் லிபியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்துஊசி மூலம் எச்.ஐ.வியை செலுத்தியதாக பல்கேரிய நாட்டைச் சேர்ந்த ஐந்து நர்சுகள்மற்றும் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒரு டாக்டர் ஆகியோர் பிடிபட்டனர்.
அவர்களைக் கைது செய்து போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர். இதில் பெங்காஸிநீதிமன்றம் 6 பேருக்கும் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து 6பேரும் திரிபோலி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த திரிபோலி உச்சநீதிமன்றம், கிட்டத்தட்ட 7 மாதங்களாகநடத்தி வந்த விசாரணைக்குப் பின்னர் நேற்று தீர்ப்பளித்தது. அதன்படி வேண்டும்என்றே எச்.ஐ.வி. வைரஸை ஊசி மூலம் செலுத்தியது மிகப் பெரிய குற்றம். இதற்காக6 பேருக்கும் மரண தண்டனை விதிப்பதாக நீதிபதி மஹ்மூத் ஹோய்ஸா தனது தீர்ப்பில்தெரிவித்தார்.
இந்த்த தீர்ப்பை குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினர்வரவேற்றுள்ளனர். தீர்ப்பு குறித்து லிபிய அதிபர் முகம்மது கடாபி கூறுகையில்,கடவுள் மிகப் பெரியவர் என்றார்.
ஆனால் இந்தத் தீர்ப்பு பாரபட்சமானது, மனித உரிமைகளுக்கு முரனாணது என்றுஐரோப்பிய யூனியனின் நீதி மற்றும் பாதுகாப்புக்கான ஆணையர் பிரான்கோபிராட்டினி கருத்து தெரிவித்துள்ளார்.