புற்றுநோய் சிறுமிக்கு ஆறுதல் தந்த சானியா
பெங்களூரு:பெங்களூரு வந்துள்ள டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, புற்று நோயால் பாதிக்கப்பட்ட 4 வயதுசிறுமியை சந்தித்து அந்த சிறுமிக்கு உற்சாகத்தைக் கொடுத்தார்.
பெங்களூரு நகரைச் சேர்ந்தவர் பிபி ஹஜீர். 4 வயது சிறுமியான பிபி, புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்.இருந்தும் டென்னிஸ் மீது தீராத பற்றுக் கொண்டிருந்தார் பிபி.
எதிர்காலத்தில் நான் சானியா மிர்ஸா போல ஆடி இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன் என்று அடிக்கடிகூறுவாராம் பிபி. மேலும், சானியாவை சந்திக்க வேண்டும் என்பதும் இந்த குட்டிச் சிறுமியின் தீராத ஆசையாகஇருந்து வந்தது.
இந்த நிலையில் பெங்களூரு வந்த சானியாவிடம் பிபி குறித்து தெரிவிக்கப்பட்டது. வியப்படைந்த சானியாவும்,பிபியை சந்திக்க நான் தயார் என்று கூறியுள்ளார். இதையடுத்து பிபி தனது பெற்றோருடன், சானியா தங்கியுள்ளஹோட்டலுக்கு வந்தார்.
பிபியைப் பார்த்ததும் சானியா அவரிடம் வாஞ்சையுடன் நெருங்கி தூக்கி வைத்துக் கொஞ்சினார். உனது பெயர்என்ன, என்னை மாதிரி நீயும் விளையாடுவாயா என்று கேட்டு அந்த சிறுமியை இன்பக் கடலில் ஆழ்த்தினார்.
பிபியுடன் சில நிமிடங்களை செலவிட்டார் சானியா. ஆனால் பிபிக்கோ அது பல நாள் கனவு நிறைவேறியதருணங்கள் என்பதால் படு குஷியாக சானியாவுடன் பேசிக் கொண்டிருந்தார். அதன் பின்னர்சானியாவிடமிருந்து விடைபெற்றுச் சென்றார் பிபி.
பின்னர் செய்தியாளர்களிடம் சானியா கூறுகையில், எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. சிறு குழந்தைகளுக்குக் கூடநான் ரோல் மாடலாக இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
பிபி விரைவில் குணமடைய வேண்டும். இதற்காக இறைவனிடம் நான் வேண்டிக் கொள்கிறேன் என்றார் சானியா.
இன்னொரு சானியாவாக பிபி உருவாக நாமும் கூட வேண்டிக் கொள்வோம்.