போலீஸ் குடியிருப்பில் எஸ்.ஐ. தற்கொலை
கடலூர்:கடலூரில் காவலர் குடியிருப்பில் சப் இன்ஸ்பெக்டர ஒருவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதுஅங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செஞ்சி காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் செந்தில்குமார் (35). கடலூரில் உள்ளபோலீஸ் குடியிருப்பில் தங்கியிருந்தார்.
இவரது மனைவி சொந்த ஊரான மதுரைக்குப் போயிருந்தார். இந்த நிலையில் செந்தில்குமார் நேற்று இரவுவீட்டில் மது அருந்தினார். அப்போது மதுவுடன் விஷத்தையும் கலந்து சாப்பிட்டுள்ளார்.
சிறிது நேரத்திலேயே அவர் இறந்து போனார். இரவு செந்தில்குமாரின் மனைவி தனது வீட்டுக்குப் போன்செய்துள்ளார். ஆனால் நீண்டநேரமாகியும் செந்தில்குமார் போனை எடுக்காததால், செஞ்சி காவல் நிலையத்திற்குபோன் செய்துள்ளார்.
அங்கிருந்த காவலர் செந்தில்குமார் வீட்டுக்குத்தான் போனதாக கூறியுள்ளார். ஆனால் போன் வெகுநேரமாகியும்எடுக்கப்படவில்லை என்று செந்தில்குமாரின் மனைவி கூறியதால் சந்தேகமடைந்த அந்தக் காவலர் வீட்டுக்குச்சென்று பார்த்தார்.
அப்போதுதான் செந்தில்குமார் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. செந்தில்குமாரின் இந்த முடிவுக்குஎன்ன காரணம் என்பது தெரியவில்லை.
சமீபகாலமாக காவல் நிலையத்திலும், காவலர் குடியிருப்பிலும் காவல்துறையினர் தற்கொலை செய்து கொள்வதுஅதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications