மதிமுகவில் குழப்பம் விளைவிக்கும் திமுக: பாஜக
சென்னை:முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோநடைப்பயணம் மேற்கொண்டிருப்பதைப் பொறுக்க முடியாமல் மதிமுகவுக்குள்குழப்பம் விளைவிக்க ஆளுங்கட்சி முயலவது கடும் கண்டனத்துக்குரியது என்றுதமிழக பாஜக பொதுச் செயலாளர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முல்லைப் பெரியாறுபிரச்சினைக்காக வைகோ நடைப்பயணம் மேற்கொண்டிருப்பதை பாராட்டுகிறோம்.அவரது நடைப்பயணத்தை திசை திருப்பும் வகையில், அவரது கட்சியில்உள்ளவர்களே குழப்பத்தை விளைவிக்கிறார்கள். திமுகவின் தூண்டுதலின் பேரில்தான்இது நடைபெறுகிறது.
சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுத்து வரும் விஜயகாந்த், இந்து வழிபாட்டுத்தலங்கள் தாக்கப்பட்டபோது, இந்து சுவாமி விக்கிரகங்கள் தகர்க்கப்பட்டபோது எங்கேபோய் விட்டார்?
முரசு சின்னத்தை முடக்கினால் தமிழக அரசை முடக்குவேன் என்று முழங்கினாரே,இப்போது அமைதியாக இருப்பது ஏன்? அவரது திருமண மண்டபத்தைக் காக்க வாய்திறக்காமல் இருக்கிறாரா?
தமிழகத்தில் விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியவில்லை, அத்தியாவசியப்பொருட்களின் விலை ஆகாயத்தைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்டநிலையில் தியேட்டர்களில் சினிமா டிக்கெட் கட்டணத்தைக் குறைப்பதால் யாருக்குஎன்ன லாபம்? என்றார் தமிழிசை.












Click it and Unblock the Notifications