பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் வெளிநடப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழ்நாடு கால்நடை மற்றும் கால்நடை அறிவியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்துமாணவர்கள் வெளிநடப்புச் செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. அதில் மாணவ,மாணவியருக்கான பட்டங்களை ஆளுநர் பர்னாலா வழங்குவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் திடீரென அதை மாற்றி, சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்களே பட்டங்களை வழங்குவார்கள் எனஅறிவிக்கப்பட்டது. இதனால் பல மாணவர்களும், பிள்ளைகள் பட்டம் வாங்குவதைப் பார்க்க வந்திருந்தபெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து அவர்கள் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்து விட்டு வெளிநடப்புச் செய்தனர். இதனால்அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மாணவர்களும், பெற்றோர்களும் கோபத்துடன் செய்தியாளர்களிடம்கூறுகையில்;

பாதுகாப்பு என்ற பெயரில் பல்கலைக்கழக அதிகாரிகள் எங்களை அவமதித்து விட்டனர். எனவேதான்பட்டங்களை வாங்காமல் நாங்கள் புறக்கணித்தோம் என்றார்.

மாணவர்களின் புறக்கணிப்பையைடுத்து ஆளுநர் பர்னாலா, பல்கலைக்கழக டீனை அழைத்து மாணவர்களைசமாதானப்படுத்தி அழைத்து வருமாறு உத்தரவிட்டார்.

டீனும், பிற அதிகாரிகளும் மாணவர்களை சமாதானப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்றனர். அதன் பின்னர்அனைத்து மாணவர்களுக்கும் ஆளுநர் பர்னாலா பட்டங்களை வழங்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+