For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எந்த பிரச்சனையையும் சந்திப்போம்- வைகோ

By Staff
Google Oneindia Tamil News

தேனி:மதிமுக தொண்டர்கள் எந்தப் பிரச்சினை வந்தாலும் அதை பந்தாடும் பக்குவமும், திறமையும் பெற்றவர்கள்என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்பு நடைப்பயணம் மேற்கொண்டுள்ள வைகோ, தேனி மாவட்டஎல்லைக்குள் நேற்று அடியெடுத்து வைத்தார். இரவில் தேனியில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசினார்.

தனது பேச்சின்போது மதிமுகவில் எழுந்துள்ள அதிருப்தி அலைகள் குறித்து சூசகமாக சுட்டிக் காட்டிப் பேசினார்.வைகோ பேசுகையில், இந்த நடைப்பயணம் கட்சிப் பிரசாரம் அல்ல. அரசியல் நோக்கத்திற்காகவும் அல்ல.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு அமல்படுத்தத் தவறி விட்டது. தமிழக உரிமைகளைக் காவு கொடுத்துவிட்டது. இப்பிரச்சினையில் மீண்டும் உச்சநீதிமன்றத்துக்குப் போவோம் என்பது தமிழர்களுக்குவிளைவிக்கப்படும் கேடு.

அணை உடையும் என்கிறார்கள். சீனப் பெருஞ்சுவர், கல்லணை போன்ற தொழில்நுட்பத்துடன் இந்த அணைகட்டப்பட்டுள்ளது. எனவே 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கும்.

அறுபடை வீடுகளில் திருச்செந்தூரும் ஒன்று. முருகனுக்கு எத்தனை கோவில்கள் இருந்தாலும் திருச்செந்தூருக்குச்செல்லும் பக்தர்கள் அதிகம் உண்டு.

திருச்செந்தூருக்கு பாஞ்சாலங்குறிச்சி பக்தர்கள் சென்றபோது பானர்மேன் தலைமையில் ஆங்கிலப் படைகள்பாஞ்சாலங்குறிச்சிக்குப் படையெடுத்து வந்தது போல, நடைப்பயணம் தொடங்குகிற சமயத்தில் கட்சிக்கு நாசம்விளைவிக்க சிலர் எண்ணுகிறார்கள்.

ஆனால் எத்தனை பிரச்சினைகள் வந்தாலும அவற்றைப் பந்தாடக்கூடிய தொண்டர்கள் மதிமுகவில் உள்ளனர்என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் வைகோ.

இந்தப் பொதுக் கூட்டத்திற்கு தமிழக பத்திரிக்கையாளர்களை விட அதிக அளவில் கேரளபத்திரிக்கையாளர்களும், தொலைக்காட்சி செய்தியாளர்களும் வந்திருந்து குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X