For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இஸ்லாமிய அமைப்புக்கு மலேசியாவில் தடை

By Staff
Google Oneindia Tamil News

கோலாலம்பூர்:இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரண்பாடான கொள்கையைக் கொண்ட அமைப்புக்குமலேசிய அரசு தடை விதித்துள்ளது.

மலேசியாவில் 90ம் ஆண்டுகளில், அல் அர்காம் என்ற அமைப்புதோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பில் 10,000 உறுப்பினர்கள் இருந்தனர். 1 லட்சம்பேர் வரை இந்த அமைப்பின் ஆதரவாளர்களாக இருந்தனர். அரசு ஊழியர்கள் பலரும்இதில் உறுப்பினர்களாக இருந்தனர்.

இயற்கையை மீறிய சக்தி உள்ளது என்பதுதான் அல் அர்காம் அமைப்பின் போதனை.இந்த சூப்பர் சக்தி மூலம் மரணத்தைத் தடுத்து நிறுத்த முடியும், வானில் செல்லும்விமானத்தை கீழே இறக்க முடியும் என்பது போன்ற பிரசாரத்தில் இந்த அமைப்பினர்ஈடுபட்டு வந்தனர்.

மேலும், இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் தங்களது பாவங்களைஅமைப்பின் தலைவர் அஸாரி முகம்மதுவிடம் இறக்கி வைத்து விட்டால் அவர்தங்களை காப்பார் என்றும் போதனை செய்யப்பட்டு வந்தது.

இந்த அமைப்பினரின் போதனைகளும், பிரசாரங்களும் மலேசியாவில் பெரும்சர்ச்சையை எழுப்பினர். இந்த அமைப்பின் கொள்கைகள் திருக்குரானுக்கு எதிரானது,முஸ்லீம் மார்க்கத்திற்கு முரண்பாடானது என்று எதிர்ப்புக் குரல் கிளம்பியது.இதையடுத்து அரசு இந்த இயக்கத்தைத் தடை செய்தது.

அஸாரி முகம்மது கைது செய்யப்பட்டு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.சிறையிலிருந்து விடுதலை ஆன பின்னர் புதிதாக ருபாகா கார்ப்பரஷேன் என்றநிறுவனத்தைத் தொடங்கினார்.

இந்த நிறுவனம், சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, ஜோர்டான் ஆகியநாடுகளில் ஹோட்டல்கள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறது.

தற்போது ருபாகா (அரபி மொழியில் தோழர்கள் என்று பொருள்) என்ற பெயரில்புதிதாக ஒரு அமைப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

அல் அர்காம் அமைப்பின் மறு உருவம்தான் ருபாகா என்ற சந்தேகம் மலேசியஅரசுக்கு எழுந்தது. இதையடுத்து ருபாகா அமைப்புக்கு மலேசிய அரசு தடைவிதித்துள்ளது.

இதுகுறித்து மத்திய மலேசியாவின் செலாங்கார் மாகாண இஸ்லாமிய விவகாரத்துறைசெய்தித் தொடர்பாளர் பக்ருல் அஸாம் யாஹியா கூறுகையில், அல் அர்காம்அமைப்பு கடந்த 1994ம் ஆண்டு தடை செய்யப்பட்டது.

அந்த அமைப்புக்கு மீண்டும் உயிர் கொடுக்க ருபாகா அமைப்பினர் முயலுகின்றனர்.எனவேதான் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார் யாஹியா.

ருபாகா அமைப்பின் 16 உறுப்பினர்கள் மீது செலாங்கார் மாகாண இஸ்லாமிய ஷரியாநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் அவர்கள்நீதிமன்றம் முன்பு நிறுத்தப்படவுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X