கோவில்பட்டி: கார்- லாரி மோதலில் 6 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கோவில்பட்டி:தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நடந்த சாலை விபத்தில் நீலகிரி மாவட்ட அதிமுக இலக்கிய அணிச்செயலாளர் உள்பட 6 பேர் பலியானார்கள்.
நீலகிரி மாவட்ட அதிமுக இலக்கிய அணிச் செயலாளர் அர்ஜூன் ராஜ் தனது குடும்பத்தினருடன் காரில்திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தார்.
இன்று காலை கோவில்பட்டி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி கார் மீது மோதியது.இதில் அர்ஜூன் ராஜ், மனைவி மல்லிகா உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஒருவர் அங்கு பலியானார்.
மேலும் 6 பேர் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications