நினைவு நாள்: பெரியார், எம்ஜிஆருக்கு அஞ்சலி
சென்னை:தந்தை பெரியார், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஆகியோரின் நினைவுநாளையொட்டி அவர்களின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தந்தை பெரியாரின் 33வது நினைவு நாளையொட்டி பெரியார் திடலில் உள்ளபெரியார் நினைவிடத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில்திராவிடர் கழகத் தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில்செய்தி விளம்பரத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதியும் கலந்து கொண்டார்.
தமிழக அரசின் சார்பில் அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு நிதியமைச்சர்அன்பழகன், மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுஆகியோர் மாலை அணிவித்தனர்.
மதுரையில் உள்ள பெரியார் சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார். புதுவையில் பெரியார் சிலைக்கு மாநிலமுதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்தார்.
இதேபோல எம்.ஜி.ஆரின் 19வது நினைவு நாளையொட்டி, சென்னை கடற்கரையில்உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உறுதிமொழியை வாசிக்கஜெயலலிதா உள்ளிட்டோர் திரும்பக் கூறி உறுதிமொழி ஏற்றினர்.
தமிழகம் முழுவதும் உள்ள பெரியார், எம்.ஜி.ஆர். சிலைகளுக்கும் மாலைகள்அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications