For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னை-நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்!
சென்னை:சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிக்க ஜி.எஸ்.டி. சாலையில் நடு ரோட்டில் கார்தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் பாலகுமார். நுங்கம்பாக்கத்தில் உள்ள தனதுஅலுவலத்திற்குச் செல்வதற்காக தனது காரில் ஜி.எஸ்.டி சாலையில் சென்றுகொண்டிருந்தார்.
பல்லாவரத்தையடுத்த ராணுவ அதிகா>கள் பயிற்சி மையம் அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது திடீரென கார் தீப்பிடித்துக் கொண்டது. இதையடுத்து காரைநிறுத்தி விட்டு பாலக்குமார் கீழே இறங்கி, உயிர் பிழைத்தார்.
தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் கார் முழுவதும் எரிந்து சாம்பலானது.போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையில் நடுச் சாலையில் கார் தீப்பிடித்து எ>ந்ததால்பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
காரில் ஏற்பட்ட மின் கசிவே தீவிபத்தக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
Comments
Story first published: Tuesday, December 26, 2006, 5:30 [IST]