தமிழ்நாட்டுக்கு தான் பலன் கிடைக்குது: அச்சு
திருவனந்தபுரம்:முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டத் தொடங்கினால் தமிழகத்துக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு தண்ணீர்கிடைக்காது என கேரள முதல்வர் அச்சுதானந்தன் மிரட்டியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையில் நீர்த் தேக்க அளவை உயர்த்த மறுத்து வரும் அச்சு, தமிழகம் வேண்டுமானால்புதிய அணை கட்டி நீரைத் தேக்கிக் கொள்ளட்டும் என கிண்டல் செய்து வருகிறார்.
இந் நிலையில் மலம்புழா அருகே விவசாயிகள் நிகழ்ச்சியில் பேசிய அச்சு,
கேரள, தமிழக நீர்ப் பாசனத்துறை அமைச்சர்களுக்கு இடையே டெல்லியில் மிகவும் சுமூகமான முறையில்பேச்சுவார்த்தை நடந்தது. முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டத் தொடங்கினால் தமிழகத்துக்கு 5வருடத்துக்கு தண்ணீர் கிடைக்காது.
மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பெரியாறு அணையை பார்விைட்டபோது அணை ஆபத்தாக உள்ளதாகக்கூறினர். ஆனால், அதை தமிழகம் ஏற்க மறுத்து வருகிறது.
தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் பலன் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் பரம்பிக்குளம்-ஆழியாறுநதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், இப்போது அந்த ஒப்பந்தத்தால் தமிழ்நாட்டுக்கு மட்டும் தான்பலன் கிடைக்கிறது என்றார்.