இனி பாஸ்போர்ட் வாங்குவது ரொம்ப ஈசி!
டெல்லி:இன்று முதல் பாஸ்போர்ட் பெறுவதற்கான விதிமுறைகள் எளிதாகின்றன.
பாஸ்போர்ட் வழங்குவதில் ஏற்படும் தாமதங்களை தவிர்ப்பதற்காக, வழக்கமாகக் கோரப்படும் 14ஆவணங்களில் இனிமேல் 3 ஆவணங்களை மட்டும் வழங்கினால் போதும்.
அதில் ஒரு ஆவணம் மட்டும் போட்டோவுடன் கூடியதாக இருந்தாலே போதுமானது.
பணியாளர் ஐடி கார்ட், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம், பேன் கார்ட் உள்ளிட்டஆவணங்கள் இதில் அடங்கும்.
மேலும் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பம் செய்தவர் குறித்து போலீஸ் விசாரணையும் தேவையில்லை எனஅறிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைப்படி போலீஸ் சான்றிதழுக்கு பதிலாக துணைச் செயலர், தாசில்தார்ஆகியோரிடம் சான்று பெற்றாலே போதும்.
மேலும், விண்ணப்பதாரருக்கு எதிராக எந்த வழக்கும் இல்லாவிட்டால் பாஸ்போர்ட் ரினீவலின்போது போலீஸ்விசாரணை சான்றிதழ் தேவையில்லை. விண்ணப்பித்த நான்கு நாட்களுக்குள் பாஸ்போர்ட் ரினீவல் செய்யப்படும்.
அதே போல தத்கல் திட்டத்திலும் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது தத்கல் பாஸ்போர்ட்டுகள் 20நாட்களில் வழங்கப்பட்டு வருகின்றன. இனிமேல் 14 நாட்களுக்குள் வழங்கப்படும். அதே நேரத்தில்விண்ணப்பதாரர்கள் மேலும் ரூ.500 செலுத்தினால் ஏழு நாட்களுக்குள் பாஸ்போர்ட் கிடைக்கும்.
"தத்கல் திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் மறு வழங்கல் (ரினீவல்) மூன்று நாட்களுக்குள் செய்யப்படும். மேலும்"தத்கல் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர் அதற்கான காரணங்களை குறிப்பிடத் தேவையில்லை.