பட்டுக்கோட்டை-ஆற்றில் பஸ் விழுந்து 8 பேர் பலி
பட்டுக்கோட்டை:பட்டுக்கோட்டை அருகே அரசு பஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் 8 பேர் பலியாயினர். 25 பேர் படுகாயமடைந்தனர்.
நாகப்பட்டிணத்தில் இருந்து இன்று அதிகாலை ராமநாதபுரம் அருகே உள்ள தொண்டிக்கு அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. காலை 4.45 மணியளவில் பட்டுக்கோட்டை நசுவினி ஆற்றுப் பாலத்தில் பஸ் போய்க்கொண்டிருந்தபோது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்தார்.
அவர் தூக்கத்தில் இருந்திருப்பார் என்று தெரிகிறது. இதனால் பஸ் பாலத்தில் சுவற்றை உடைத்துக் கொண்டுஆற்றுக்குள் பாய்ந்தது. இதில் ரங்கம்மாள் (65), சீரங்கம் (50), ராமச்சந்திரன், சென்னையன், ஜெயபால் (50)உள்பட 6 பேர் அந்த இடத்திலேயே நீரில் மூழ்கி பலியாயினர்.
மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து அறிந்ததும் அந்தப் பகுதி மக்கள் உடனடியாக மீட்புப்பணிகளில் ஈடுபட்டு இந்த 20க்கும் மேற்பட்டவர்களை ஆற்றிலிருந்து மீட்டனர். மற்றவர்கள் தாங்களாகவே நீந்திகரை சேர்ந்துவிட்டனர்.
காயமடைந்தவர்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் ஒரு பெண்வழியிலேயே இறந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கண்டக்டர் பக்கிரிசாமி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதையடுத்து பலத்த காயமடைந்தவர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில்சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச் சம்பவத்தால் பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்துநெடுநேரம் பாதிக்கப்பட்டது.
ஆற்றில் மிகக் குறைந்த அளவே தண்ணீர் ஓடிக் கொண்டிருந்ததால் பெரும்பாலானவர்களால் உயிர் தப்பமுடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதில் பயணம் செய்து உயிர் தப்பிய பயணி ஒருவர் கூறுகையில், பஸ்ஸை டிரைவர் படு வேகத்தில்ஓட்டியதாகவும் பாலத்தில் இருந்த பள்ளத்தை கவனிக்காமல் அதில் விட்டதாகவும், இதையடுத்து பஸ்கட்டுப்பாட்டை இழந்து சுவரை உடைத்துக் கொண்டு ஆற்றில் பாயந்ததாகவும் கூறினார்.
திருச்செங்கோடு அருகே விபத்து-5 பேர் பலி:
இந் நிலையில் திருச்செங்கோடு அருகே வேனும் மினி லாரியும் மோதிக் கொண்டதில் 4 பெண்கள் உட்பட 5 பேர் பலியாயினர்.
திருப்பூரைச் சேர்ந்த 20 பக்தர்கள் வேன் மூலம் மேல்மருத்தூர் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.அதிகாலை எலிமேடு என்ற இடத்துக்கு அருகே வந்தபோது எதிரே வந்த மினி லாரி, வேன் மீது மோதியது. இதில்வேன் அப்பளமானது. இதில் சாந்தி, சுப்புலட்சுமி, ராஜேஸ்வரி, தேவி உள்பட 5 பேர் அந்த இடத்திலேயேஉயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications