கனடா முருகன் கோவிலில் முப்பெரும் விழா
ஸ்கேர்போரா:கனடாவின் ஸ்கேர்போரா நகரில் உள்ள முருகன் கோவிலில் பொங்கல்திருநாளையொட்டி முப்பெரும் விழா நடைபெறவுள்ளது.
தமிழ்ப் புத்தாண்டு, தைப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் பிறந்த நாள் ஆகியமூன்றையும் ஸ்கேர்போரா நகரின், பிர்ச்மெளன்ட் சாலையில் உள்ள முருகன்கோவிலில் முப்பெரும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 14ம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை இந்த விழாநடைபெறவுள்ளது.
திஇதில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் நிகழ்ச்சிக்கும்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர 2003 மற்றும் 2006ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்த தனித்தமிழ்ப் பெயர்கள் சூட்டப்பட்ட குழந்தைகளுக்கு தலா ஆயிரம் டாலர்பரிசளிக்கப்படவுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி ஜனவரி 7 ஆகும்.
மேலும் தங்களது பிள்ளைகளின் வட மொழிப் பெயர்களை சட்டப்படி தனித் தமிழ்ப்பெயராக மாற்றிய பெற்றோர்களுக்கு, ஒவ்வொரு பிள்ளைக்கும் 100 டாலர்அடிப்படையில் 10 பேருக்கு பரிசளிக்கப்படும்.
இந்த விழாவின் போது நடைபெறவுள்ள தமிழ் அறிவுப் போட்டி -2006ல் மேற்பிரிவு,நடுப் பிரிவு, கீழ்ப் பிரிவு, மழலையர் பிரிவு என நான்கு பிரிவுகளில் முதலிடம்பெறுபவர்களுக்கு தங்கப் பதக்கம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்கலந்து கொள்ள டிசம்பர் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த முப்பெரும் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என தமிழ் உள்ளங்களைவிழா ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.
மேல் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:
(416) 281 1165, (416) 261 9099, (416) 335 9462, (416) 261 6745.
(உங்கள் ஊரில் உள்ள கோவில்கள், தமிழ் அமைப்புகள், இந்திய அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகள் குறித்தும்எங்களுக்கு தகவல்கள் அனுப்பலாம். அதை வெளியிட தட்ஸ்தமிழ் ஆவலோடு காத்திருக்கிறது)












Click it and Unblock the Notifications