முன்னாள் அமெரிக்க அதிபர் போர்டு மரணம்
கலிபோர்னியா:அமெரிக்க முன்னாள் அதிபர் ஜெரால்டு போர்டு தனது 93வது வயதில்கலிபோர்னியாவில் மரணமடைந்தார்.
அமெரிக்காவின் 38வது அதிபர் போர்டு. குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்.வாட்டர்கேட் ஊழலில் சிக்கி அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன் பதவி இழந்த பிறகுஅதிபரானவர். ஆனால், இரண்டரை ஆண்டு காலம் தான் அதிபர் பதவியில் இருந்தார். 1976ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு ஜனநாயகக்கட்சி வேட்பாளரான ஜிம்மி கார்ட்டரிடம் தோல்வியுற்றார்.
அமெரிக்க அதிபர்களாக இருந்தவர்களிலையே அதிக காலம் உயிர் வாழ்ந்தவர்போர்டுதான். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டைவிட்டு வெளியே போகாமல் இருந்து வந்தார்.
இந் நிலையில் கலிபோர்னியாவின், ரேங்கோ மிராஜ் என்ற இடத்தில் உள்ள தனதுஇல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.15 மணிக்கு போர்டு மரணமடைந்தார்.
வாஷிங்டனில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன. பொதுமக்கள்அஞ்சலிக்காக போர்டின் உடல் கலிபோர்னியாவின் பாம் டெசர்ட், வாஷிங்டன்,கிராண்ட் ரேபிட்ஸ் (இதுதான் அவரது சொந்த ஊர்) ஆகிய இடங்களில் வைக்கப்படவுள்ளது.
அமெரிக்க வரலாற்றிலேயே மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரே அதிபர் போர்டுமட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அவர் துணை அதிபராகக் கூட மக்களால்தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை.
நிக்ஸன் அதிபராக இருந்தபோது துணை அதிபராக இருந்த ஸ்பைரோ அக்னியூயும்ஊழல் புகார் காரணமாக பதவி விலகினார். இதையடுத்து போர்டு துணை அதிபராகநியமிக்கப்பட்டார். பின்னர் நிக்ஸனும் வாட்டர்கேட் ஊழலில் சிக்கி பதவியிழந்தபோது போர்டு அதிபரானார்.
போர்டு அதிபராக பதவியேற்ற அடுத்த மாதமே, நிக்ஸனை மன்னித்து விட்டுவிடுவதாகவும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அறிவித்துஒட்டுமொத்த அமெரிக்காவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.