ஈராக், ஸ்பெயினில் குண்டுவெடிப்பு
பாக்தாத்:சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே தெற்கு ஈராக்கில் உள்ள ஷியா முஸ்லீம்கள் அதிகம்வசிக்கக் கூடிய குஃபா நகரில் கார் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 35 பேர் பலியானார்கள் , 40 பேர்படுகாயமடைந்தனர்.
ஈராக்கின் தெற்கில் உள்ள குஃபா நகரம் ஈராக்கில் உள்ள புனித நகரங்களில் ஒன்று. இங்குள்ள மார்க்கெட்டில்இன்று நடந்த குண்டுவெடிப்பில் 35 பேர் பலியாயினர். 45 பேர் காயமடைந்தனர்.
சதாம் இறந்த சில மணி நேரங்களிலேயே ஷியா முஸ்லீம்களைக் குறி வைத்து தாக்குதல் நடந்துள்ளது ஈராக்கில்பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க வீரர் சாவு:
இதற்கிடையே பாக்தாத் நகரின் சாலையோரம் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்த அமெரிக்க வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இவரது சாவின் மூலம் ஈராக்கில் பலியான அமெ>க்க வீரர்களின் எண்ணிக்கை 2,996ஐ தொட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்புதான் அமெரிக்க கடற்படை வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். சமீப நாட்களாக தினமும் சில அமெரிக்க வீர்ரகள்கொல்லப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஸ்பெயினில் குண்டு வெடிப்பு:
இந் நிலையில் ஸ்பெயின் நாட்டின் மாட்டிட் நகரின் பரஜாஸ் விமான நிலையத்தில் இன்று ஒரு கார் குண்டு வெடித்ததில் 3 பேர் காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications