ஸ்டாலின் மருத்துவவமனையில் அனுமதி
சென்னை:உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலினுக்கு கடும் முதுகு வலி ஏற்பட்டதால் சென்னைராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மகாபலிபுரத்தில் தமிழகஅரசின் சுற்றுலாத் துறை சார்பில் நாட்டிய விழாவுக்கு நேற்றுஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு உதவிவழங்கும் விழாவும் நடக்க இருந்தது.
இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தனது குடும்பத்துடன் ஸ்டாலின் சென்றார்.காலையில் மகளிர் சுய உதவிக் குழுவில் கலந்து கொண்டபோது அவருக்கு திடீரெனகடும் முதுகு வலி ஏற்பட்டது.
வலியைப் பொறுத்துக் கொண்டு விழாவில் பங்கேற்றார். விழா முடிந்து காரில்சென்னை திரும்புகையில் அவருக்கு வலி அதிகரித்தது. இதையடுத்து நேராக போரூர்ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு பரிசோதனை செய்து பார்த்ததில், முதுகில் சதைப்பிடிப்பு ஏற்பட்டிருப்பதுதெரிய வந்துத. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஸ்டாலின்.
சில நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி ஓய்வெடுக்க வேண்டும் என டாக்டர்கள்அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications