சொந்த ஊரில் சதாம் உடல் அடக்கம்
மாட்ரிட்:ஸ்பெயினில் 67 வயது மூதாட்டி இரட்டைக் குழந்தைகளைப் பெற்று புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
அந்தப் பெண்மணி ஸ்பெயினின் அண்டலூசியா நகரைச் சேர்ந்தவர். செயற்கைக் கருத்தரிப்பு மூலம் அவர்கர்ப்பமடைந்தார். அவருக்கு பார்சிலோனாவில் உள்ள டி லா சான்டா குரூய் சான் பா மருத்துவமனையில்அழகான இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.
தாயும், சேய்களும் நலமுடன் இருப்பதாகவும், குழந்தைகள் இரண்டும் இன்குபேட்டரில்வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
67 வயதில் குழந்தைகள் பெற்றுள்ள அந்தப் பெண்மணி உலகிலேயே அதிக வயதில் குழந்தை பெற்றவர் என்றபுதிய சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்பு ருமேனியாவைச் சேர்ந்த அட்ரியானா இலியஸ்கு என்பவர்66 வயதில் குழந்தை பெற்றிருந்ததே இதுவரை உலக சாதனையாக இருந்து வந்தது.
இலியஸ்குவுக்கும் இரட்டைக் குழந்தைகள்தான் கருத்தரித்தன. ஆனால் ஒரு குழந்தை கருவிலேயே இறந்துவிட்டது.
ஸ்பெயின் பெண்மணியின் பெயர் மற்றும் அவருக்குப் பிறந்த குழந்தைகள் ஆணா, பெண்ணா என்பதைதெரிவிக்க இயலாது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.