மகன் பிறந்தால் சதாம் பெயர்-குஜராத் கர்ப்பிணிகள்
குஜராத்:குஜராத் மாநிலம் ஹத்குத் கிராமத்தைச் சேர்ந்த 2 கர்ப்பிணிப் பெண்கள் தங்களுக்குஆண் குழந்தை பிறந்தால் சதாம் என்று பெயரிடப் போவதாக அறிவித்துள்ளனர்.
ஹத்குத் கிராமத்தில் உள்ளவர்களில் முக்கால்வாசிப் பேர் முஸ்லீம்கள் ஆவர். இந்தக்கிராத்தில் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டதற்கு கடும் அதிருப்தி நிலவுகிறது.அமெரிக்காவுக்கு எதிராக இக்கிராம மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
ஹத்குத் கிராமத்தைச் சேர்ந்த இக்லாஸ் பானு என்ற ஆசிரியைக்கு ஏற்கனவே 3வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது மீண்டும் கர்ப்பிணியாக உள்ள அவர்,தனக்கு மகன் பிறந்தால் சதாம் என்று பெயரிடப் போவதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து இக்லாஸ் கூறுகையில், சதாம் உசேனை தூக்கிலிட்டது தவறு. அவரைசிறையிலேயே உயிர் வாழ விட்டிருக்கலாம். தனது தவறுகளை அவர் ஒரு கட்டத்தில்உணர்ந்து திருந்தியிருப்பார். தனது குற்றங்களை உணரக் கூட அவருக்கு வாய்ப்புதரப்படவில்லை என்றார்.
சாயா பானு என்பவர் கூறுகையில், சதாம் ஒரு சிங்கம் போல. அதனால்தான் தூக்குமேடையில் தனது முகத்தை மூடாமல் தூக்கிலிடுமாறு அவர் உத்தரவிட்டார் என்றார்.சாயா பானுவும் கர்ப்பிணியாக உள்ளார். அவரும் தனக்கு மகன் பிறந்தால் சதாம் எனபெயரிடப் போவதாக கூறி












Click it and Unblock the Notifications