சென்னை பல்கலை.யின் ஆன்லைன் தமிழ் கல்வி
சென்னை:வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு இணைய தளம் மூலம் தமிழ் கற்றுத் தரும்திட்டத்தை சென்னை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தவுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ராமச்சந்திரன் கூறியதாவது:
அயல்நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் மொழி மற்றும் தமிழ் பண்பாடு,கலாச்சாரம் சார்ந்த படிப்புகளை ஆன்லைனில் அடுத்த ஆண்டு முதல்அறிமுகப்படுத்தவுள்ளோம்.
இதில் சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சேர்ந்து தமிழ்பயிலலாம். அவர்களுக்கு பல்கலைக்கழகம் சான்றிதழ் வழங்கும்.
முதல் கட்டமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் கற்பிக்கும் மையங்களைஅமைக்கவுள்ளோம். சரிவர செயல்படாமல் உள்ள மலேசியா மற்றும் சிங்கப்பூரில்உள்ள மையங்கள் மேம்படுத்தப்படும்.
அதற்கு அடுத்தபடியாக தென் ஆப்பி>க்காவில் பயிற்சி மையத்தைஏற்படுத்தவுள்ளோம். பின்னர் தமிழர்கள் அதிகம் வசிக்கும் அனைத்து நாடுகளிலும்பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
பல்கலைக்கழகத்தின் 150வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறுசமூக மேம்பாட்டுப் பணிகளில் பல்கலைக்கழகம் ஈடுபடவுள்ளது. கல்லூரிகளுடன்இணைந்து சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள குடிசைப் பகுதிகள்,கிராமங்களைத் தத்தெடுக்க உள்ளோம்.
அங்கு கல்வி, சமூகவியல், உளவியல், பொருளாதாரம், உடல் நலம் சார்ந்த பல்வேறுதிட்டங்களை செயல்படுத்த உள்ளோம் என்றார் ராமச்சந்திரன்.












Click it and Unblock the Notifications