அர்ஜூன் சம்பத் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!
திருச்சி:திருச்சி ஸ்ரீரங்கத்த்தில் பெரியார் சிலை உடைப்புக்குக் காரணமாக இருந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர்அர்ஜூன் சம்பத் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
![]() |
இந்த சம்பவத்தில் மொத்தம் 6 இந்து மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். மற்ற 5 பேரும் ஏற்கனவேகுண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டனர்.
சிலை உடைப்பில் ஆறாவது குற்றவாளியாக சம்பத் சேர்க்கப்பட்டார். பெரியார் சிலை உடைப்பால் தி.கவினரும்தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கோவில்களையும் மடங்களையும் தாக்கியது குறிப்பிடத்தக்கது.
இதனால் மதக் கலவரம் ஏற்படும் சூழல் உருவானது. ஒரு வழியாய் பதற்றம் தணிந்தது.
ஆனால், பெரியார் சிலை உடைப்புக்குப் பின் ஓடிப் போய் தலைமறைவாகிவிட்டார் சம்பத். அவரை பலதனிப்படைகள் அமைத்து தேடிய போலீசார் கடந்த 22ம் தேதி பொள்ளாச்சியில் வைத்து பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தியது, மதக் கலவரத்தை தூண்டிவிட முயன்றது ஆகியகுற்றச்சாட்டுகளையடுத்து இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருச்சி கமிஷ்னர் சங்கர் ஜிவால்உத்தரவிட்டார்.
இதனால் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இனி ஒரு வருடம் சம்பத் வெளியில் வர முடியாது.













Click it and Unblock the Notifications