சதாம் உசேனின் ரூ. 2 லட்சம் கோடி சொத்து!
பாக்தாத்:இராக் முன்னாள் அதிபர் சாதம் உசேனிடம் ரூ. 2 லட்சம் கோடி அளவுக்கு சொத்துக்கள் இருந்ததாகவும் அதைஅவர் உலகின் பல நாடுகளிலும் வங்கிகளிலும், பினாமிகள் பெயரில் சொத்துக்களாகவும் பதுக்கிவைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
![]() |
இந்த பணம், சொத்துக்கள், நகைகள் குறிந்து அவரது மகள்கள், மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தஇராக்கிய அரசு முடிவு செய்துள்ளது.
சதாம் உசேன் கடந்த சில தினங்களுக்கு முன் தூக்கிலிடப்பட்டு அவரது சொந்த ஊரிலேயே உடல் அடக்கம்செய்யப்பட்டுவிட்டது.
அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சென்றவண்ணம்உள்ளனர். அழுகையோடு அஞ்சலி செலுத்திவிட்டு அமெரிக்காவை அழிப்போம் என்று கோஷமிட்டபடிசெல்கின்றனர்.
இந் நிலையில் இராக்கிய அரசும், அமெரிக்காவும் சதாமின் சொத்துக்கள் குறித்து கவனத்தை திருப்பியுள்ளன.சதாமின் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு அவரது கோடிக்கணக்கான சொத்துக்களை அமெரிக்க ராணுவம்கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
அவரது மாளிகைகளில் இருந்த தங்க கட்டில்கள், தங்க குளியல் அறைகள், தங்க குழாய்கள், நகைகள், பணம்போன்றவை கைப்பற்றப்பட்டன.
சதாம் சுவிட்சர்லாந்து, ஜப்பான், ஜெர்மனி மற்றும் மேற்காசிய நாடுகளில் உள்ள பல வங்கிகளில் ரூ. 2 லட்சம்கோடி அளவுக்கு ரொக்கமாகவும், தங்கம், வைரம் போன்ற ஆபரணங்களாகவும் முடக்கி வைத்திருப்பதாகஅமெரிக்கா கூறுகிறது.
இவை இராக் மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்டவை என்றும் இந்த பணம், சொத்துக்கள் குறித்து ஜோர்டானில்இருக்கும் சதாமின் மகள்கள் ரகத், ரானா மற்றும் அவரது உறவினர்களுக்குத் தான் தகவல் தெரியும் என்றும்அமெரிக்கா கூறுகிறது. இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications