சண்டையை நிறுத்துங்கள்: இலங்கைக்கு ஐநா அறிவுரை

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்:இலங்கை ராணுவமும், விடுதலைப் புலிகளும் உடனடியாக சண்டையை நிறுத்தி விட்டு அப்பாவி மக்களுக்குஏற்பட்டு வரும் பாதிப்புக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது.

Tamil children killed in Lankan bombing

இலங்கையில் தமிழர் பகுதிகளில் தொடர்ந்து ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று மன்னார்மாவட்டத்தில் உள்ள இலுப்பக்கடவை மீனவர் கிராமத்தில் நடந்த தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் 14 பேர்கொல்லப்பட்டனர். இவர்களில் 6 பேர் குழந்தைகள். 30 பேர் காயமடைந்தனர்.

Tamil children injured in Lankan bombing

இலங்கை விமானப் படையின் இந்தத் தாக்குதலுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன.இதுகுறித்து நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பொது மனித உரிமை விவகார உதவிச் செயலாளர் மார்கரெட்டாவால்ஸ்ட்ரோம் கூறுகையில், இலங்கையில் நிலைமை மேலும் மேலும் மோசமடைந்து வருகிறது. 14 அப்பாவிகள்உயிரிழந்துள்ளது மிகவும் கவலை தருகிறது.

Tamil children injured in Lankan bombing

இவர்களை இலங்கை விமானப் படை குண்டு வீசிக் கொன்றுள்ளது. இது மிகவும் வருத்தத்திற்குரியது. இருதரப்பும் உடனடியாக போரை நிறுத்த வேண்டும். சர்வதேச சட்டங்கைள மதித்து அப்பாவி மக்களின் உயிரைக்காக்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்..

Tamil children injured in Lankan bombing

இதற்கிடையே வாகரை பகுதியில் உள்ள ராணுவ முகாம் ஒன்றை விடுதலைப் புலிகள் இன்று தாக்கி அழித்தனர்.இதில் நான்கு வீரர்கள் காயமடைந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+