சொத்துத் தகராறு: அண்ணன் காதை கடித்த தம்பி
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே சொத்துத் தகராறு கோபமடைந்த இளைஞர் தனது அண்ணனின் காதைக் கடித்துத் துப்பினார்.
காஞ்சிபுரம் அருகே உள்ளது புனகரம்பாக்கம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி. இவரது அண்ணன் பிச்சமுத்து.இவர்களுக்கு பூர்வீக சொத்து உள்ளது.
சொத்தைப் பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக பிச்சமுத்துவிடம் பேசச் சென்றார் முரளி. அப்போது இருவருக்கும்இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கோபமடைந்த முரளி, அண்ணன் மீது பாய்ந்து அவரது இடதுகாதைக் கடித்துத் துப்பினார்.
துண்டான காதுடன் துடிதுடித்த பிச்சமுத்து ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சுங்குார்ச் சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அண்ணன் காதைக் கடித்த தம்பியை கைது செய்துவிசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications