சென்னையைக் கலக்கிய ஐஸ்க்ரீம் குண்டு
சென்னை:சென்னை தண்டையார்பேட்டையில் குப்பைத் தொட்டியில் ஐஸ்க்ரீம் டப்பாவிற்குள்வெடிகுண்டு இருப்பதாக கிளம்பிய தகவலையடுத்து அங்கு பரபரப்பு நிலவியது.
தண்டையார்பேட்டை ரத்தினசபாபதி முதல் தெருவில் குப்பைத் தொட்டி உள்ளது.அங்கு ஒரு ஐஸ்க்ரீம் டப்பாவுக்குள் வெடிகுண்டு இருப்பதாக செய்தி பரவியது.இதனால் அங்குள்ளவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர்.வெடிகுண்டு நிபுணர்களும் வந்து, அந்த மர்மப் பொருளை ப>சோதித்தனர். அதில்அந்த டப்பாவிற்குள் இருந்தது குண்டு இல்லை என்பது தெரிய வந்தது.
பந்து வடிவ ஐஸ்க்ரீம் டப்பாவிற்குள், பட்டாசு, சாம்பல் ஆகியவற்றுடன் நெருப்புவைப்பதற்காக திரியையும் இணைத்து யாரோ அங்கே போட்டுள்ளனர். இதுவெடிகுண்டு இல்லை, சாதாரண பட்டாசுதான் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து வெடிகுண்டு பீதி அகன்று மக்கள் நிம்மதி அடைந்தனர். இதேபோலபெரம்பூரில் மளிகைக் கடை ஒன்றின் அருகே கிடந்த ஒரு பொருள் வெடிகுண்டுபோலத் தெரிந்ததால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார்விரைந்து வந்து பார்த்தபோது அது திருஷ்டிக்கு வைக்கப்பட்ட தேங்காய் என்பதுதெரிய வந்தது.












Click it and Unblock the Notifications