கொழும்பு-டிரான்ஸ்பார்மர் குண்டு வைத்து தகர்ப்பு
கொழும்பு:கொழும்பு அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் தகர்க்கப்பட்டது. இதில் 10 வீடுகள்சேதமடைந்தன. அப்பகுதியில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது.
கொழும்பு அருகே உள்ள வட்டலா என்ற இடத்தில், கொழும்பு நகரையும், சர்வதேசவிமான நிலையத்தையும் இணைக்கும் முக்கியச் சாலையில் இன்று காலைடிரான்ஸ்பார்மர், குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.
இதனால் அப்பகுதியில் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. 10 வீடுகள்சேதமடைந்தன. ஆனால் யாரும் காயமடையவில்லை என ராணுவம்தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மின் நிலைய பாதுகாவலர் உள்பட 2 பேரை போலீஸார்கைது செய்துள்ளனர். விடுதலைப் புலிகள்தான் இதற்குக் காரணம் என போலீஸார்குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் புலிகள் தரப்பில் இச்சம்பவம் குறித்து கருத்துதெரிவிக்கப்படவில்லை.
மதுரையில் ஈழ விடுதலை ஆதரவு மாநாடு:
இதற்கிடையே மதுரையில் ஈழ விடுதலை மாநாடு நடந்தது. தமிழர் தேசிய இயக்கத் தலைவரும், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவருமான பழ.நெடுமாறன் தொடங்கி வைத்த இம் மாநாட்டையொட்டி அண்ணா பஸ் நிலையம் அருகில் இருந்து ஊர்வலம் நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications