தாயகத்தில் குண்டு வீச வைகோ சதி-எல்.ஜி.,செஞ்சி
சென்னை:நெல்லையிலிருந்து கூலிப்படையை வரவழைத்து மதிமுக தலைமைக் கழக அலுவலகமான தாயகத்தில் குண்டுவீசி அந்தப் பழியை எங்கள் மீது போட வைகோ சதித் திட்டம் தீட்டியுள்ளதாக எல்.கணேசனும், செஞ்சிராமச்சந்திரனும் கூறியுள்ளனர்.
போட்டி மதிமுக விரும்பினால் திமுக கூட்டணியில் இணையலாம், திமுகவில் இணைந்தால் அவர்களுக்குக்கட்சிப் பதவிகளில் போட்டியிட சம வாய்ப்பு வழங்கப்படும் என்று சென்னையில் சனிக்கிழமை நடந்த திமுக உயர்மட்ட செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுகவின் இந்த பகிரங்க அழைப்பு குறித்து ஆலோசித்து அடுத்த கட்ட முக்கிய முடிவை எடுக்க தஞ்சையில்இன்று போட்டி மதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
திருவாரூர் மாவட்ட மதிமுக செயலாளர் தியாக பாரி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், திமுககூட்டணியில் இணைவது குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், நாங்கள் திமுககூட்டணியில் இணைய திமுக உயர் மட்ட செயல் திட்டக் குழு ஒப்புதல் வழங்கியிருப்பதற்கு நன்றிதெரிவிக்கிறோம்.
இன்று முதல் திமுக தலைவர், முதல்வர் கருணாநிதி காட்டும் வழியில், அவரது வழிகாட்டுதலின் கீழ்செயல்படுவோம்.
சென்னையில் 10ம் தேதி நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தின்போது தாயகத்தில் வெடிகுண்டுகளை வீசித்தாக்குதல் நடத்தி அந்தப் பழியை எங்கள் மீது போட வைகோ சதித் திட்டம் தீட்டியுள்ளார்.
நெல்லையிலிருந்து இதற்காக கூலிப் படையை அவர் வரவழைத்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்துஎங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தாக்குதல் மூலம் தனக்கு அனுதாபம் தேடிக் கொள்ள வைகோதிட்டமிட்டுள்ளார்.
எங்களது குற்றச்சாட்டுக்களுக்கு நேரடியாக பதில் அளிக்க வைகோவுக்குத் திராணியில்லை. ஆனால் மதிமுகதொண்டர்களை கவரும் வகையில் முதலைக்கண்ணீர் வடித்து நாடகமாடுகிறார்.
மதிமுக தொண்டர்கள் வைகோ பேசுவதை நம்ப வேண்டாம். தாயகம் பக்கம் கூட அவர்கள் எட்டிப் பார்க்கவேண்டாம் என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications