பெரியார் நல்லவரா?-கேக்குறார் சு.சுவாமி
சென்னை:இந்து கடவுள்களின் சிலைகள் குறித்து அவமரியாதையாக பேசிய முதல்வர்கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவருக்கு எதிராகபோராட்டம் நடத்தப்படும் என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமிகூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முதலமைச்சர்கருணாநிதி தொடர்ந்து இந்து கடவுள் சிலைகளையும், கோயில் சிற்பங்களையும்விமர்சித்து கருத்து தெரிவித்து வருகிறார்.
இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். எந்த மதத்தினருக்கும் எதிராகசெயல்பட மாட்டேன் என்று உறுதி மொழி எடுத்த முதலமைச்சர் இது போன்றுபேசுவது கண்டிக்கத்தக்கது. அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம்.
இந்து கோயில் முன்பு பெரியார் சிலை நிறுவுவதை நியாயப்படுத்தும் முதலமைச்சர்,வேளாங்கண்ணி தேவாலயம் முன்போ, நாகூர் தர்கா முன்போ பெரியார் சிலைஅமைப்பதை ஏற்றுக் கொள்வாரா?
பெரியார் நல்லவர், புனிதர் என்றால், இவர்கள் ஏன் திகவை உடைத்து விட்டுதிமுகவை உருவாக்கினார்கள்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் தமிழக அரசு உரய நடவடிக்கைஎடுக்கவில்லை. நமக்கு சாதகமாக உச்சநீதிமன்ற தீர்ப்பு கிடைத்தும் அதைபயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு தவறிவிட்டது. கருணாநிதியின் சுயநலப்போக்குதான் இதற்குக் காரணம்.
பொங்கல் பண்டிகைக்குள் இதுதொடர்பாக தீர்வு காண தமிழக அரசுமுயற்சிக்காவிட்டால் 5 மாவட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி அரசுக்கு எதிராகபோராட்டம் நடத்துவோம்.
முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றம் வந்து வாதாடாதவைகோ உள்பட எந்த தலைவர்களுக்கும் இது குறித்து பேச உரிமையில்லை என்றார்சுவாமி.












Click it and Unblock the Notifications