சென்னையில் 189 குழந்தைகள் மாயம்-பாஜக குண்டு
சென்னை:சென்னையிலும் சுற்றுப் பகுதிகளிலும் கடந்த சில மாதங்களில் 189 குழந்தைகள் காணாமல் போய்விட்டதாகவும்இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் பாஜக கோரியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் நிருபர்களிடம் பேசிகையில்,
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
உத்தரபிரதேசம் நொய்டாவில் சிறுமிகள் பாலியியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம்நாட்டையே உலுக்கியுள்ளது. இந்நிலையில் சென்னையிலும் 189 சிறுவர், சிறுமிகள் காணவில்லை என போலீசார்தெரிவிக்கின்றனர். இவர்களின் கதி என்ன. இதில் போலீசாரின் விசாரணை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதுகுறித்து விசாரிக்க வேண்டும்.
தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் அனாதை ஆசிரமங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியகுழந்தைகளை பல வெளிநாட்டினர் தத்து எடுத்துச் செல்கின்றனர். இது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.
தமிழக அரசு கரும்பு விவசாயிகளின் நலன் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாஜ்பாய் ஆட்சியில்விலைவாசி உயர்வு கட்டுபாட்டில் இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி உயர்வு கட்டுப்பாட்டில் இல்லை.விலை உயர்வை குறைக்க மத்திய அரசு தயாராக இல்லை.
பாஜக ஆட்சியில் விலை உயர்ந்தாலும் அதன் பலன்கள் விவசாயிகளை போய் சேர்ந்தது. ஆனால் காங்கிரஸ்ஆட்சியில் விலை உயர்வால் பொதுமக்கள் அவதிபடுகின்றனர். இதுபோன்ற பிரச்சனைகள் குறித்து மக்களிடம்விழிப்புண்ர்வு ஏற்படுத்த பாஜக சார்பில் அடுத்த மாதம் பிப்ரவரி 10ம் தேதி வரை பொதுக்கூட்டங்கள் நடத்தமுடிவு செய்து நடத்தி வருகிறோம். வரும் 13ம் தேதி சென்னையில் முரளி மனோகர் ஜோஷியும், நாகர்கோவில்21ம் தேதி ராஜ்நாத்சிங்கும் பேசுகிறார்கள்.
கோவில்களுக்கு முன் பெரியார் சிலைகள் வைக்க கூடாது. மேலும் சிலைகளின் கீழ் உள்ள கடவுள் இல்லை,கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்ற வாசனங்கள் நீக்கப்பட வேண்டும். இதற்கு வன்முறை தேவையில்லை,மக்கள் மூலம் தீர்வு காண வேண்டும்.
பொங்கல் விழாவை சமூக பாதுகாப்பு விழாவாக கொண்டாட வேண்டும் என முதல்வர் கருணாநிதிஅறிவித்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். பொங்கலை எல்லா மதத்தினரும் கொண்டாட முன் வர வேண்டும்.தமிழ் புத்தாண்டும் பாரத்தின் கலாச்சரம் தான் என்றார்.












Click it and Unblock the Notifications