ஜல்லிக்கட்டு-மேனகா வடிவில் மீண்டும் சிக்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த இடைக்கால அனுமதிவழங்கப்பட்டு இருப்பதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்என முன்னாள் மத்திய அமைச்சரும், பிராணிகள் நல ஆர்வலருமான மேகனா காந்திகூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
![]() |
தமிழகத்தில் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவருகிறது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் போது விலங்குகளுக்கு மட்டுமல்லாமல், அதில்கலந்து கொள்ளும் வீரர்களுக்கும் பாதிப்பு ஏற்பாடுகிறது. கடந்த ஆண்டு 30 பேர்வரை இதனால் உயிரிழந்தார்கள். இது சட்டவிரோதமானது.
![]() |
இந்த நிகழச்சியை தடை செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு தடை விதித்துகடந்த காலத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் அலங்கலாநல்லூர்,பாலமேடு கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டு மட்டும் ஜல்லிக்கட்டுநிகழ்ச்சியை நடத்த இடைக்கால அனுமதி அளித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளைஉத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து நீதிமன்றம் நன்றாக ஆலோசிக்க வேண்டும். எனவே இந்த உத்தரவைஎதிர்த்து உயர்நீதிமன்றத்தில் பிராணிகள் நல அமைப்பு சார்பில் மேல்முறையீடுசெய்யப்படும் என்றார்.














Click it and Unblock the Notifications