தா.கி. கொலை வழக்குக்கு சுப்ரீம் கோர்ட் தடை
டெல்லி:முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கை மதுரை நீதிமன்றம் விசாரிக்கஉச்சநீதிமன்றம் இட்ைக்காலத் தடை விதித்துள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு மதுரை அண்ணா நகரில் அதிகாலையில் ஒரு கும்பலால்தா.கிருட்டிணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியஇந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரிஉள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் தற்போது ஜாமீனில்விடுதலையாகியுள்ளனர்.
இந்த வழக்கு மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்தநிலையில், இவ்வழக்கை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி சாட்சிகளில்ஒருவரான முத்துராமலிங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதிகள் அசோக் பான், லோகேஷ்வர் சிங் ஆகியோரது முன்னிலையில் இம்மனுநேற்று விசாரைணக்கு வந்தது. அப்போது மனுதாரரின் வழக்கறிஞர் ரஞ்சித் குமார்ஆஜராகி வாதிடுகையில், தா.கிருட்டிணன் கொலை வழக்கு விசாரணை தமிழகத்தில்நடந்தால் நியாயம் கிடைக்காது.
எனவே வேறு மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட வேண்டும். மதுரை அமர்வுநீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்றுவாதாடினார்.
இதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டல் ஜெனரல் மோகன்எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி அசோக் பான், மதுரை கோர்ட்நீதிபதி, மு.க.அழகிரி மீது 3 புகார்களைக் கூறி அதன் மீது முதல் தகவல் அறிக்கையும்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்படி இருந்தால் எப்படி நியாயமாக வழக்கு நடைபெறும் என கருத முடியும்?என்று கேட்டார். பின்னர் இரு தரப்பு வாதங்களையும் கேட்டு முடித்த நீதிபதிகள்,மதுரை நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்துஉத்தரவிட்டனர்.
மேலும் இதுதொடர்பாக மு.க.அழகிரி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டோர், தமிழகஅரசு மற்றும் சாட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications